கோவையில் பயங்கரம்: இஸ்லாம் மதத்திற்கு மாற தடை போட்டவரை கொலை முயற்சி செய்த 5 பேர் கைது!

Update: 2022-03-09 01:49 GMT

கோவையில் முஸ்லிம் பெண் ஒருவர் மதம் மாறி திருமணம் செய்து கொண்ட பின்னர் கணவர் மதம் மாறுவதற்கு தடை போட்ட மாமனாரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்வதற்கு திட்டம் போட்ட 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர் சஹானா என்கின்ற முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருமே வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார். இதனிடையே அருண்குமாரை முஸ்லிம் மதத்திற்கு மாறுவதற்கு சஹானா குடும்பத்தார் வற்புறுத்தி வந்துள்ளனர். இதற்கு அருண்குமார் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அருண்குமாரின் தந்தை குமரேசனை கொலை செய்வதற்கு சஹானாவின் குடும்பத்தினர் திட்டம் போட்டுள்ளனர். இது பற்றி உறவினர்கள் வாடஸ்அப் மற்றும் தொலைபேசியில் பரிமாற்றங்கள் செய்தது தெரியவந்துள்ளது.

மேலும், குமரேசனை கொலை செய்வதற்காக கொல்கத்தாவை சேர்ந்த ஒருவரிடம் துப்பாக்கி வாங்குவதற்கு முயற்சி செய்துள்ளதாக தேசிய புலனாய்வு முகமை கண்டுப்பிடித்துள்ளது. இது பற்றி தகவல் தெரிந்த உடன் போலீசாருக்கு அலார்ட் செய்து முகமதி அலி ஜின்னா, இம்ரான்கான், சதாம் உசேன், பக்ருதீன், ராம்வீர் அஜய் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பலை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News