130 கோடி மக்களும் கொரோனாவுடன் போராடி வருகின்றனர்.. உள்துறை அமைச்சர் பேச்சு.!

130 கோடி மக்களும் கொரோனாவுடன் போராடி வருகின்றனர்.. உள்துறை அமைச்சர் பேச்சு.!

Update: 2020-11-21 18:04 GMT

சென்னையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரை நிகழ்த்தி வருகிறார். அவர் பேசியதாவது: உலகம் முழுவதும் கொரோனாவால் போராடி வரும் நேரத்தில் இந்தியாவும் கடு¬மாயன போராட்டத்தை சந்தித்தது. ஆனால் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது. நாட்டில் உள்ள 130 கோடி மக்களும் கொரோனவுக்கு எதிராக அரசுடன் போராடி வருகின்றனர்.


மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொரோனவுக்கு எதிராக சிறப்பான முடிவுகளை எடுத்து வருகிறார். கொரோனா தொற்றுக்கு எதிராக தமிழக அரசு சிறப்பான நடவடிக்கையை எடுத்து வருகிறது. தமிழகத்தை போன்று வேறு எந்த மாநிலமும் சிறப்பாக பணியாற்ற வில்லை என்று கூறலாம். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News