18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய ரசூல்கான் உட்பட 3 பேர் கைது!

Update: 2022-06-11 12:31 GMT

18 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி தொல்லைக் கொடுத்து வந்த மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்ன, கொடுங்கையூரை சேர்ந்தவர் ரசூல்கான் 40, இவர் ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து 18 வயதுடைய இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்வதற்கு வற்புறுத்தி வந்துள்ளார். அது மட்டுமின்றி அப்பெண்ணிற்கு திருமணம் செய்வதற்காக வேறு ஒரு வாலிபருடன் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த வாலிபரை ரசூல்கான் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் சேர்ந்து மிரட்டியுள்ளனர்.

இது பற்றி அந்த இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரசூல்கான் உட்பட அவரது இரண்டு நண்பர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்துவிட்டு இளம்பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்திய சம்பவம் கொடுங்கையூரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News