சென்னையைவிட திண்டுக்கல்லில் பயங்கரம்: 12 மணி நேரத்தில் 3 பேர் படுகொலை!

Update: 2022-06-05 02:51 GMT

சென்னையை தொடர்ந்து தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 12 மணி நேரத்தில் தொடர்ந்து 3 இடங்களில் மூன்று பேர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், முருகபவனம் அருகே வசித்து வரும் சிவக்குமாரின் மகன் பிரபாகர். இவர் அப்பகுதியில் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் மர்ம நபர்கள் வீடு புகுந்து கழுத்தை அறுத்து படுகொலை செய்தனர். இது பற்றி போலீசார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே போன்று திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கதிரயன் குளம் அருகில் முன்விரோதம் காரணமாக சிவா என்ற இளைஞரும் படுகாலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், பழனி அருகே உள்ள புளியமரத்துசெட் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுநாடார். இவருக்கு ஈஸ்வரன் 55, மகேந்திரன் 50 என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையில் கடந்த சில நாட்களாக சொத்து தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், அண்ணன் தம்பி இவருக்கும் இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அண்ணன் ஈஸ்வரன், தம்பி மகேந்திரனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் ரத்த வெள்ளத்திலேயே மகேந்திரன் துடிதுடித்து உயிரிழந்து விட்டார். இது பற்றி பழனி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே இரவில் சுமார் 12 மணி நேரத்திலேயே 3 பேர் அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை காட்டிலும் மின்னல் வேகத்தில் கொலை நடைபெறுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Source, Image Courtesy: Asianetnews

Tags:    

Similar News