கோவை விமான நிலையத்தில் 7 கிலோ தங்கம் பறிமுதல்.!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

Update: 2021-07-03 06:37 GMT

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.


 



அப்போது ஆறுமுகம், ஹாஜி அப்துல் ஹமீது, மாதவன், சுலைமான், ராஜேந்திரன், தீன் இப்ராகிம்ஷா ஆகிய 6 பேரிடம் இருந்த 7 கிலோ 908 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவர்கள் ஆறு பேரும் பெங்களூரு மற்றும் ராமநாதபுரம், வேலூர், திட்டக்குடி உள்ளிட்ட ஊர்களை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

Similar News