சென்னையில் அதிர்ச்சி: புடவை பார்சலுக்கு அடியில் 8 கிலோ போதைப் பொருள்!

சென்னை விமான நிலையத்தில், பார்சல் சேவை மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட இருந்த 8 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக சென்னை மண்டல போதைப் பொருள் தடுப்பு பிரிவு கூறியுள்ளது.

Update: 2021-10-05 06:37 GMT

சென்னை விமான நிலையத்தில், பார்சல் சேவை மூலமாக ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட இருந்த 8 கிலோ போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக சென்னை மண்டல போதைப் பொருள் தடுப்பு பிரிவு கூறியுள்ளது.

கடந்த மாதம் 25ம் தேதி சென்னை விமான நிலைய பார்சல் சேவை மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில், புடவை பார்சலுக்கு அடியில் சுமார் 8 கிலோ போதைப் பொருள் மறைத்து கடத்தப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து பறிமுதல் செய்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், இது எங்கிருந்து வந்தது என்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த பார்சல் கூரியர் காரைக்காலில் இருந்து வந்துள்ளது. அங்கு சென்று நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது பற்றிய விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

Source: Puthiyathalaimurai

Image Courtesy: Royal Haskoning

Tags:    

Similar News