9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கிடையாது.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.!

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-03-17 12:37 GMT

நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

அதே போன்று அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரிசோதனையை மீண்டும் அதிகரிக்க வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.


 



இதனிடையே தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் அச்சப்படுகின்ற நிலை உருவாகியுள்ளது. கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது.


 



இந்நிலையில், 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி தேர்வு நடைபெறாது என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News