விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு நடவடிக்கை ! உயர்நீதிமன்றத்தில் இந்து அறநிலையத்துறை தகவல்!

கோயில்கள் முன்பாக வைக்கப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் வைத்து கரைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து அறநிலையத் துறை உறுதி அளித்துள்ளது.

Update: 2021-09-07 03:06 GMT

கோயில்கள் முன்பாக வைக்கப்படும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் வைத்து கரைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து அறநிலையத் துறை உறுதி அளித்துள்ளது.

இது பற்றிய வழக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும், சிலைகளை கரைப்பதற்கு எந்த மாதிரியான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த வழக்கில் இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கும், பொது இடங்களில் சிலை வைப்பதற்கும் தமிழக அரசு தடை விதித்ததுடன் உரிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது எனக் கூறினார்.

மேலும், கடந்த ஆண்டு  போன்று சிறிய கோயில்களின் முன்பாக வைக்கப்படும் சிலைகளை, இந்து அறநிலையத்துறையே எடுத்து நீர் நிலைகளில் கரைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: News 7


Tags:    

Similar News