மறைந்த எம்.எல்.ஏ.க்கள், நடிகர் விவேக் உட்பட பல பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம்.!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டத்தொடர் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேரவையில் உரையாற்றினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டத்தொடர் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேரவையில் உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது சட்டப்பேரவை தலைவர் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 13 பேருக்கான இரங்கல் குறிப்புகள் வாசித்தார். அதில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில் பிரபல நடிகரும் சமூக ஆர்வலருமான விவேக், பிரபல எழுத்தாளர் ராஜநாராயணன், சுதந்திர போராட்ட வீரர் துளசி அய்யா வாண்டையார், இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் காளியண்ணன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.