13 கோடி வீடுகளுக்கு எரிவாயு கொண்டு சேர்த்துள்ளது.. அமித்ஷா பேச்சு.!

13 கோடி வீடுகளுக்கு எரிவாயு கொண்டு சேர்த்துள்ளது.. அமித்ஷா பேச்சு.!

Update: 2020-11-21 18:12 GMT

சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி வருகின்றார். அதில் அவர் பேசியதாவது: நாடு முழுவதும் 13 கோடி வீடுகளுக்கு எரிவாயு கொண்டு சேர்த்துள்ளது இந்த அரசு.


மேலும், விவசாயிகளுக்கு ரூ.30 ஆயிரம் கோடி மூலம் அளிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு என்கிற திட்டம் வருகின்ற 2022ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும்.


தமிழகத்தில் 45 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6000 நிதியுதவி நேரடியாக அவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளது மத்திய அரசு. இன்னும் இது போன்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
 

Similar News