மாணவர்களுக்கு தமிழில் மருத்துவ படிப்பை கற்றுக் கொடுக்க வேண்டும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா!

தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு தமிழில் மருத்துவப் படிப்புகளை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Update: 2022-11-13 05:49 GMT

இன்று சென்னையில் நடைபெற்ற இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் 75 ஆவது பவள விழா நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கலந்துகொண்டு இருக்கிறார். குறிப்பாக இந்த நிகழ்ச்சிக்காக தமிழக ஆளுநர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் தென்னரசு மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் பல்வேறு அமைச்சர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இந்திய சிமெண்ட் நிறுவனம் உருவாகி தன்னுடைய பவள விழா நிகழ்ச்சியை இன்று கொண்டாடி கொண்டிருக்கும் தருணத்தில் இவ்விழாவின் 75 ஆவது பவள விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் சிறப்புரை ஆற்றினார்.


தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு தாய்மொழியான தமிழில் மருத்துவம் பாடங்களை கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தமிழக அரசாங்கம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டிருக்கிறார். குறிப்பாக தமிழில் மருத்துவ பாடங்களை மொழிபெயர்க்கும் பணிகள் வரவேற்கத்தக்ககம் விதமாக அமைந்திருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். மாணவர்கள் தாய்மொழியில் மருத்துவ படிப்பை கற்பதன் மூலமாக அவர்களுக்கு மருத்துவத்தின் மீதான ஆர்வம் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் கூறியிருக்கிறார்.


மேலும் அவர் இது பற்றி கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்தின் மீது தன்னுடைய கவனத்தை எப்பொழுதும் செலுத்தி கொண்டு இருப்பார். குறிப்பாக தமிழகத்தில் கொண்டுவரப்படும் ஒவ்வொரு திட்டத்தையும் கூர்ந்து கவனித்துக் கொண்டு இருக்கிறார். மத்திய அரசின் கூடுதல் கவனம் எப்பொழுதும் தமிழகத்தின் மீது இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Polimer News

Tags:    

Similar News