சமூகநீதிக்காக பாடுப்பட்ட தலைவர்களின் பெயர்களை இருட்டடிப்பு செய்யாதீர்கள்: அண்ணாமலை ஆவேசம் !

இருட்டடிப்பு செய்யாமல் மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும் என்பதே பாஜகவின் கோரிக்கை என தெரிவித்தார்.

Update: 2021-09-06 13:45 GMT

பாரதி, வ.உ. சி பெயர்களை இருட்டடிப்பு செய்யதீர்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக சட்டபேரவையில் பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவிக்கபட்டிருந்தது. இதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வரவேற்பு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக கொண்டாடுவதற்கு பாஜக எப்போதும் மறுப்பு தெரிவிக்கவில்லை.ஆனால், சமூகநீதிக்கு பெரியாருக்கு முன்னரே பாரதி, வ. உ.சி போன்றவர்கள் சமூக நீதிக்காக போராடினர் அவர்களின் தியாகங்களையும், போராட்டங்களையும் இருட்டடிப்பு செய்யாமல் மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும் என்பதே பாஜகவின் கோரிக்கை என தெரிவித்தார்.

மேலும், தருமபுரியில் அமைந்துள்ள பாரத நினைவாலயம் என்ற பெயரை மாற்றி பாரத மாதா திருக்கோவில் என்ற பெயரை சூட்டவேண்டும் இல்லையேனில் பாஜக மிகப்பெரிய அறப்போரட்டத்தை கையில் எடுக்கும் எனவும் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

Source: News 18 Tamil

Tags:    

Similar News