அரக்கோணம்: ஏ.டி.எம். இயந்திரத்தை துண்டு துண்டாக உடைத்து லட்சக்கணக்கில் பணம் கொள்ளை!

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே ஆக்சிஸ் வங்கியின் ஏடிஎம் மெஷினை வெல்டிங் மெஷினை கொண்டு துண்டு துண்டாக உடைத்து 4 லட்ச ரூபாய் அளவிலான பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ள மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-09-17 09:07 GMT

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே ஆக்சிஸ் வங்கியின் ஏடிஎம் மெஷினை வெல்டிங் மெஷினை கொண்டு துண்டு துண்டாக உடைத்து 4 லட்ச ரூபாய் அளவிலான பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ள மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெருங்களத்தூர், ஜிஆர்டி பொறியியல் கல்லூரி அருகே செயல்பட்டு வரும் ஆக்சிஸ் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை பராமரித்து வரும் செக்யூர் வேல்யூ என்ற தனியார் நிறுவனம் சார்பில் கடந்த 15ம் தேதி எட்டரை லட்சம் ரூபாய் பணம் நிரப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு நேரத்தில் ஏடிஎம் மையத்தை வெல்டிங் இயந்திரங்களின் உதவியோடு துண்டு, துண்டாக வெட்டிய மர்ம நபர்கள், அதில் இருந்த சுமார் மூன்று லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த ஏடிஎம் மையத்தில் காவலாளி மற்றும் சிசிடிவி கேமரா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Polimer News.


Tags:    

Similar News