சென்னை: இரு மகள்களுடன் ஆட்டோ டிரைவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு: கொலையா, தற்கொலையா விசாரணை!

Update: 2022-01-19 09:48 GMT

சென்னை, புதுப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மறைமலை நகர் அருகே தனது இரண்டு மகள்களுடன் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, புதுப்பேட்டை பச்சையப்பன் முதலி தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஞானவேல் 44, இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், இரண்டு பெண் பிள்ளைகளும் உண்டு. இதனிடையே ஞானவேல் தனது இரண்டு குழந்தைகளுடன் கடந்த 15ம் தேதி முதல் காணவில்லை என்று அவரது மனைவி ஜெயந்தி எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகர் அருகே உள்ள கடம்பூர் என்ற கிராமத்தில் உள்ள கிணறு அருகாமையில் ஒரு ஆட்டோ நிற்பதாக போலீசாருக்கு அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர். புகாரை தொடர்ந்து நேரில் சென்று போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கிணற்றில் இறந்த நிலையில் மிதந்து கொண்டிருந்த 2 சிறுமிகள் மற்றும் ஒரு நபரை போலீசார் மீட்டனர். அவரை பற்றி விசாரித்தில் சென்னை எழும்பூர் பகுதியில் காணாமல் போன ஞானவேல் என்று கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Tags:    

Similar News