ஆவின்பால் விலை உயர்வால் கொதிக்கும் குடும்பத் தலைவிகள்!

தொடர்ச்சியாக நடந்த போராட்டத்தின் விளைவாக ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மூன்று உயர்ந்து இருக்கிறது.

Update: 2022-11-05 06:15 GMT

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையதளத்தில் மேலாண்மை இயக்குனர் நேற்று வெளியிட்ட செய்து குறிப்பில் இது பற்றி கூறுகையில், ஆவின் நிறுவனம் நான்கு புள்ளி 20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நான்கு ஒன்றுக்கு சராசரியாக 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து சுமார் 30 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு மூலம் விற்பனை செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இடுப்பொருட்கள் விலை ஏற்றம் உற்பத்தி செலவினும் கூடியதால் பால் உற்பத்தி ஆளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமாறு கோரிக்க வைத்தார்கள். இந்த கோரிக்கை தொடர்பாக அவர்கள் பல்வேறு விதங்களில் போராட்டங்களையும் மேற்கொண்டார்கள்.


இதன் ஒரு பயனாக பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு மூன்று உயர்த்தி 32 இல் இருந்து 35 ஆகவும், எருமை பால் கொள்முதல் விலையில் லிட்டருக்கு மூன்று உயர்த்தி 41 இல் இருந்து 44 ஆகவும் 5ஆம் தேதியிலிருந்து வழங்கப்படும். இதன் மூலம் சுமார் 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் நேரடியாக பயன்பெறுவார்கள். தற்போது உள்ள சூழ்நிலையில் கொள்முதல் மற்றும் விற்பனை விலை ஆகிய இரண்டையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


என்றாலும் நுகர்வோர் நலன் கருதி இல்லங்களில் நுகர்வோர் பயன்படுத்தும் பயன்பாட்டான பால் பச்சை வண்ணம் ஆகியவற்றின் விலையில் எந்த விதமான மாற்றமும் இன்றி தற்போது நிலையை தொடரும். நிறைகொள் கொழுப்பு பாலில் பொறுத்தவரை நுகர்வோர் வாங்கும் பாலின் விலை உயர்த்தப்படாமல் வணிகரீதியாக பயன்படுத்தப்படும் பாலின் விலை மட்டும் ஆவின் நிறுவனம் மாற்றியமைப்பதாக கூறப்பட்டிருக்கிறது. பால் விலை உயர்வு குடும்ப தலைவிகளை பெரும் இன்னலில் சிக்க வைத்து இருக்கிறது.

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News