பெரியார் பஸ் நிலையத்திற்கு மீனாட்சி அம்மன் பெயர் வைக்க வேண்டும் - கோரிக்கையுடன் இறங்கிய பா.ஜ.க!

பெரியார் பஸ் நிலையத்திற்கு மீனாட்சி அம்மன் பெயர் வைக்க வேண்டும்.

Update: 2023-01-31 01:08 GMT

மதுரையில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொது செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தை மதுரை மாவட்ட தலைவர் மா. சுசீந்திரம் தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். கூட்டத்தில் பிரதமர் மோடியை ஜி-20 மாநாட்டின் தலைவராக தேர்ந்தெடுத்த உலகு தலைவருக்கு நன்றி தெரிவித்தார். குறிப்பாக எனது பூத் வலிமையான பூத் என்ற முழக்கத்துடன் ஒவ்வொரு பூத் 25 உறுப்பினர்களை சேர்த்து கமிட்டி அமைத்துக் கொடுக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.


தொடர்ந்து மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் நிலையத்திற்கு திருவள்ளுவர் பெயரை சூட்ட வேண்டும் என்றும், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தங்க நாற்கரசாலை அமைத்துக் கொடுத்த வாஜ்பாய் அவர்களுக்கு மதுரை வீரன் ரிங் ரோட்டில் வெங்கல சிலை அமைக்க சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும், பிரதமர் நரேந்திர மோடியின் உனது திட்டமான ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியின் படத்தையும் கல்வெட்டையும் வைக்க மாவட்ட மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியும், ஏழை எளிய மக்களின் சிரமத்தை அதிகரிக்கின்ற மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு ஆகியவற்றை செய்யும் தி.மு.க அரசை ரத்து செய்ய வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  


குறிப்பாக பெரியார் பஸ் நிலையத்திற்கு மீனாட்சி அம்மன் பஸ் நிலையம் என்று பெயர் சூட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப் பட்டன. கூட்டத்தில் துணைத் தலைவர் குமார் செந்தில், பொது செயலாளர் பாலமுருகன், பொருளாளர் ராஜ்குமார் போன்ற பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News