வியூகத்தை மாற்றிய தமிழக பா.ஜ.க - தி.மு.க அமைச்சர்களின் கதறல் ஆரம்பம்!
திமுக அமைச்சர்களைக் குறிவைக்கும் தமிழக பாஜக
திமுகவின் ஆதிக்கம் மிகுந்த இடத்தில் தமிழக பாஜக தனது வியூகத்தை மாற்றியுள்ளது. திமுக அமைச்சர்களின் செயல்பாடுகளை நெருக்கமாகக் கண்காணித்து விமர்சிக்கத் தொடங்கியுள்ளது.
திமுக அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து அரசியல் விவாதங்களை உருவாக்குவதில் தமிழக பாஜக வெற்றி பெற்றுள்ளது. மின்சாரத் துறையில் மின்சாரம் மற்றும் நிலக்கரி கொள்முதல் ஒப்பந்தங்களை வெற்றிகரமாக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளோம் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அதேபோல, போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்குத் தனியாரிடமிருந்து தீபாவளி இனிப்புகள் வாங்க திட்டமிடப்பட்டது குறித்து பாஜக அம்பலப்படுத்தியதன் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டது. இப்போது அரசு நடத்தும் ஆவின் இனிப்புகளை வழங்க அரசு பரிசீலித்து வருவதாக பாஜக நிர்வாகி கரு. நாகராஜன் கூறினார்
எங்கள் கட்சித் தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி மாதம் தோறும் மின்சார மீட்டர் கணக்கெடுப்பு கொண்டு வர வேண்டும் என்று திமுகவிடம் கேட்டுக்கொள்கிறோம் என்று கரு. நாகராஜன் கூறினார்.
எங்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பெரும்பாலானோர் திமுக ஆட்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகஇவ்வாறு செய்வதாக கரு. நாகராஜன் பேசியுள்ளார். முன்பு பாஜகவை புறக்கணித்த இந்த அமைச்சர்கள் இப்போது எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.