மம்தா பானர்ஜிக்கு எதிராக தமிழகம் முழுவதும் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்.!

மேற்கு வங்கத்தில் பாஜகவினர் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து, தமிழக பாஜக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

Update: 2021-05-05 07:09 GMT

மேற்கு வங்கத்தில் பாஜகவினர் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து, தமிழக பாஜக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை வள்ளூவர் கோட்டத்தில் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் பாஜகவினர் ஏராளமானோர்கள் கலந்து கொண்டு மம்தா பானர்ஜிக்கு எதிராக கோஷமிட்டனர். நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தோல்வியுற்றார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் மம்தா பானர்ஜி திரிணாமூல் காங்கிரஸ் குண்டர்களை ஏவி விட்டு வருவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.




 


இதுவரை மாநிலத்தில் 10க்கும் மேற்பட்டோர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் மேற்கு வங்க மாநிலமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மாநிலத்தில் பாஜகவினர் வீடு மற்றும் கடைகள் சூறையாடப்பட்டுள்ளது.


 



பெண்களை கற்பழித்து கொல்லும் அளவிற்கு சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வன்முறையை வேடிக்கை பார்க்கும் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜகவினர் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

Similar News