கறுப்பர் கூட்டம் பார்ட் 2? தமிழ்க் கடவுள் முருகனைத் தி.க கூட்டத்தில் கொச்சைப்படுத்திய திருமாவளவன்!
கறுப்பர் கூட்டம் பார்ட் 2? தமிழ்க் கடவுள் முருகனைத் தி.க கூட்டத்தில் கொச்சைப்படுத்திய திருமாவளவன்!
பாலிமர் செய்தி வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் திராவிடர் கழகம் நடத்திய ஒரு விருது வழங்கும் விழாவில் பேசும் திருமாவளவன், முருகன் தமிழ்க் கடவுள் என்றால் அவருடைய அண்ணனாகிய விநாயகர் மட்டும் எப்படி ஹிந்தி கடவுள் ஆவார்? இருவரும் ஒரு அப்பா, அம்மாவிற்கு பிறந்தவர்கள் தானே என கொச்சையாக கேள்விகளை எழுப்பினார்.
தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை அளித்தால் மட்டும் நாம் தமிழர்களாக தலைநிமிர்ந்து விடுவோமா? என்று கேள்வி எழுப்பினார்.
ஒரு அப்பனுக்கு பிறந்த முருகன் தமிழ் கடவுள் விநாயகர் ஹிந்தி கடவுளா ? திருமாவளவன் சீற்றம் #VCK | #TholThirumavalavan | #God https://t.co/QfdCIOaIvP
— Polimer News (@polimernews) January 8, 2021
முருகனை நம் கடவுள் என்று ஏற்றுக் கொண்டால், சனாதனம் என்ற வழுக்கு பாறையில் வைத்து விழுந்துவிடுவோம். இதன் காரணத்தினாலேயே தான் இதிலிருந்து திராவிடர் கழகம் முழுமையாக ஒதுங்கி நிற்பதாகவும் தெரிவித்தார். விநாயகருக்கும் முருகனுக்கும் இடையிலான ஞானப்பழக் கதையை கூறியவர், ஹிந்துக்கள் என்ற போர்வையில் அனைவரையும் கட்டாயப்படுத்தி இணைத்து குலதெய்வ வழிபாட்டை கூட, பெருந்தெய்வ இந்து வழிபாடாக மாற்றி வருவதாகக் குற்றம் சாட்டினார்.
அங்கே சுற்றி இங்கே சுற்றி கடைசியில் தமிழ்க் கடவுளாம் முருகனையும் கொச்சைப்படுத்தத் துணிந்து விட்டார்கள். தமிழ்நாட்டில் யுகாதி தெலுங்கு வருட பிறப்பிற்கு, அம்பேத்கரின் பிறந்த நாளுக்குக் கூட அரசு விடுமுறை இருக்கும் பட்சத்தில் தமிழர்கள் கொண்டாடும் தைப்பூசத்திற்கு விடுமுறை அளிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
— Dr.RUPAKRISHNAN (@DrRupakrishnan) January 8, 2021