தமிழக அரசின் முக்கிய துறையின் பெண் அதிகாரி சி.பி.ஐ.க்கு மாற்றம்: அதிர்ச்சியில் தி.மு.க !

தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஐஜி வித்யா குல்கர்னியை சிபிஐ இணை இயக்குனராக நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் திமுக அரசு அதிர்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Update: 2021-11-18 07:27 GMT

தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஐஜி வித்யா குல்கர்னியை சிபிஐ இணை இயக்குனராக நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் திமுக அரசு அதிர்ச்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் பல்வேறு காவல்துறை அதிகாரிகள் வெவ்வேறு பணியிடங்களுக்கு மாற்றப்பட்டு வந்தனர். அதன்படி ஊழல் மற்றும் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஐஜியாக பணியாற்றி வந்த வித்யா குல்கர்னி தற்போது மத்திய அரசு பணியான சிபிஐ இணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

இவரது மாற்றம் பற்றி தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் வட்டாரங்களில் மட்டுமின்றி திமுக அரசாங்கத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முக்கிய துறையில் உயர் பதவியில் இருப்பவர்கள் சிபிஐ பணிக்கு மாற்றப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News