6 மின் திட்டங்கள்... நமது தமிழகத்தில் விரைவில்... மத்திய அரசு கொடுத்த புது அப்டேட்!

தமிழ்நாட்டில் 6 மின் திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

Update: 2023-04-05 01:30 GMT

தமிழ்நாட்டில் ஆறு மின் திட்டப்பணிகள் விரைவில் முடிவடைந்து செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே . சிங் கூறியுள்ளார். மாநிலங்களவையில் கே.ஆர்.என் ராஜேஷ்குமார் எழுப்பிய கேள்விக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் குறிப்பாக இதுவரை 6 மின் திட்டப்பணிகள் விரைவில் முடிக்கப்பட இருப்பதாகவும் அவை முடிக்கப்பட்ட பிறகு, உடனே செயல்பாட்டிற்கு வரும் என்று மத்திய அமைச்சரவை சார்பில் தற்போது பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.


வடசென்னை அனல்மின் திட்டம் 3-வது கட்டம், எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல்மின் திட்டம், உடன்குடி எஸ்டிபிபி முதல் கட்டம், எண்ணூர் அனல் மின் திட்டம், குந்தா மின் திட்டம், கொல்லிமலை புனல்மின் திட்டம் ஆகியவற்றின் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. எனவே இத்தகைய மின் திட்டங்கள் செயல்பாட்டிற்கு வரும் பொழுது அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாக்கும் ஒரு சூழ்நிலையும் ஏற்பட்டு இருக்கிறது.


மத்திய அரசு, பல்வேறு நிலைகளில் உள்ள இந்தப் பணிகளை விரைந்து முடிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டங்களுக்கான செலவு மதிப்பீடு மாற்றியமைக்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News