சென்னை: அத்தியாவசிய தேவைகளுக்கு 200 மாநகர பேருந்துகள் இயக்கம்.!
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் (மே 10 முதல் 24 வரை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் (மே 10 முதல் 24 வரை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதற்கு செல்லும் அரசு ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன்படி இன்று சென்னை மாநரகாட்சிக்குட்பட்ட பகுதிகளில் 200 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் இன்று முதல் முக்கிய வழித்தடங்களில் 200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பேருந்துகளில் பயணம் மேற்கொள்பவர்கள் நோய் தடுப்பு விதிகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து பயணம் செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.