தி.மு.க.வின் அராஜகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.. அம்மா உணவகம் தாக்குதல் குறித்து ராமதாஸ் ட்வீட்.!

சென்னை, முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தில் புகுந்து திமுகவை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-05-04 09:51 GMT

சென்னை, முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தில் புகுந்து திமுகவை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு அதிமுக தனது கடும் கண்டனத்தை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து சென்னை முன்னாள் மேயரும், எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன் ஒரு ட்விட் செய்திருந்தார். அரசு உணவகத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய திமுகவினரை கட்சியில் இருந்து நீக்கி கழக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என் பதிவிட்டிருந்தார்.


 



இந்நிலையில், அம்மா உணவகம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட் செய்துள்ளார். அவர் கூறியதாவது:

சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தின் பெயர்ப்பலகை, அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படம் ஆகியவற்றை திமுகவினர் சூறையாடியிருப்பது கண்டிக்கதக்கது. அதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


 



ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து ஆள்பவர்களின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப கொள்கை மாற்றங்கள் செய்யப்படுவது இயற்கையே. ஆனால், எது நடந்து விடக் கூடாது என்று மக்கள் அஞ்சினார்களோ அத்தகைய செயல்களில் திமுகவினர் ஈடுபடுவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Similar News