சென்னையில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.!

சென்னையில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில் கணினி விற்பனை நிறுவனத்தில் இந்தத் தீ விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது.

Update: 2021-07-22 10:10 GMT

சென்னையில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில் கணினி விற்பனை நிறுவனத்தில் இந்தத் தீ விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது.


சென்னை, அண்ணாசாலை சாந்தி சினிமா தியேட்டர் அருகே உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தீ வேகமாக பரவத்தொடங்கியதும், எழும்பூர் பகுதியிலிருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் வேகமாக செயல்பட்டு, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.


சில மணி நேரங்கள் நடைபெற்ற இந்த மீட்புப்பணியில் முற்றிலுமாக தீ அணைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த விபத்தின்போது கட்டடத்தில் சிக்கியவர்களை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

Similar News