சென்னை, வடபழனி மைதானத்தில் டம்மி வெடிகுண்டால் பரபரப்பு.!

சென்னை, வடபழனியில் உள்ள ஒரு காலியான மைதானத்தில் நாட்டு வெடிகுண்டு போன்று கிடந்த பொருளால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-06-24 03:32 GMT

சென்னை, வடபழனியில் உள்ள ஒரு காலியான மைதானத்தில் நாட்டு வெடிகுண்டு போன்று கிடந்த பொருளால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை, வடபழனி குமரன் காலனியில் உள்ள மைதானத்தில் 2 நாட்டு வெடிகுண்டு இருப்பதாக விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் ஒன்று கிடைத்து.


 



இந்த தகவலை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது வெடிகுண்டு நிபுணர்களையும் வரவழைத்து ஆய்வு செய்ததில், அது டம்மி நாட்டு வெடிகுண்டு என தெரியவந்துள்ளது. அதனை செயழிலக்க செய்யும் பணியில் வெடிகுண்டு நிபுணர்கள் ஈடுபட்டனர். மைதானத்தில் டம்மி வெடிகுண்டால் வடபழனி பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Similar News