தலைவர்களின் படத்தை அச்சிட்டு அரசின் பணத்தை வீணாக்ககூடாது ! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தக பைகளில் தலைவர்கள் படத்தை அச்சிட்டு அரசு பணத்தை வீணாக்க வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

Update: 2021-09-07 10:11 GMT

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் புத்தக பைகளில் தலைவர்கள் படத்தை அச்சிட்டு அரசு பணத்தை வீணாக்க வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலங்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் படம் புத்தக பைகளில் அச்சிடப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: பள்ளி மாணவர்கள் புத்தக பைகளில் கட்சியின் தலைவர்கள் படங்களை அச்சிடக்கூடாது. அரசின் நிதியை தவறாக பயன்படுத்தக்கூடாது. மேலும் இது போன்ற நடைமுறைகள் இனிமேல் தொடராமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News