சென்னையில் மழை எதிரொலி: சர்வதேச விமானங்கள் உட்பட 59 விமானங்கள் தாமதம்!

சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் அதித கனமழையால் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் சுமார் 13 சர்வதேச விமானங்கள் உட்பட 59 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றதாக விமான நிலைய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-11-07 12:48 GMT

சென்னையில் தொடர்ந்து பெய்துவரும் அதித கனமழையால் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் சுமார் 13 சர்வதேச விமானங்கள் உட்பட 59 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றதாக விமான நிலைய உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு சாலைகள் மற்றும் தெருக்கள் வெள்ள நீரால் மிதக்கிறது. போக்குவரத்து முற்றிலும் சில இடங்களில் தடைப்பட்டுள்ளது. படகுகளில் அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. அதே போன்று சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் குவைத், இலங்கை, லண்டன், டாக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு செல்லும் 13 விமானங்கள் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரையிலும், உள்நாட்டு விமானங்கள் சுமார் அரை மணிநேரம் தாமதமாக சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Source: News 18 Tamilnadu

Image Courtesy:Deccan Chronicle


Tags:    

Similar News