ஞாயிற்றுகிழமைகளில் கோயம்பேடு சந்தை விடுமுறை.!

கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் சென்னை, கோயம்பேடு சந்தை மூடப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2021-04-18 12:03 GMT

கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் சென்னை, கோயம்பேடு சந்தை மூடப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


 



சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் புதிய வழிமுறைகளை வெளியிட்டு வருகிறது.




 


அந்த வகையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் சென்னை, கோயம்பேடு சந்தை மூடப்படும் என்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் மாதத்தின் 2வது, 3வது ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் கோயம்பேடு சந்தையில் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News