ராணிப்பேட்டை, சேலம் உட்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!

கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, சேலம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Update: 2021-11-20 09:00 GMT

கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, சேலம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில், கர்நாடகா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

மேலும், வடதமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News