சென்னை: மெட்ரோ ரயில் நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும்.!

சென்னையில் நாளை ஒருநாள் மட்டும் மெட்ரோ ரயில் வழக்கம் போல் இயங்கும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 10 நிமிடத்துக்கு ஒரு முறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-05-08 11:46 GMT

சென்னையில் நாளை ஒருநாள் மட்டும் மெட்ரோ ரயில் வழக்கம் போல் இயங்கும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 10 நிமிடத்துக்கு ஒரு முறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஊரடங்கின்போது, அத்தியாவசிய கடைகள் மட்டும் நண்பகல் 12 மணி வரை இயங்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News