சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை: வீடுகளில் புகுந்த மழைநீர்!

சென்னை அம்பத்தூரில் கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகளில் புகுந்த தண்ணீரில் அனைத்து பொருட்களும் மூழ்கியுள்ளது. இதனால் வீட்டில் உள்ள மக்கள் வேறு இடங்களுக்கு தஞ்சம் புகும் நிலை உருவாகியுள்ளது.

Update: 2021-11-27 06:22 GMT

சென்னை அம்பத்தூரில் கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகளில் புகுந்த தண்ணீரில் அனைத்து பொருட்களும் மூழ்கியுள்ளது. இதனால் வீட்டில் உள்ள மக்கள் வேறு இடங்களுக்கு தஞ்சம் புகும் நிலை உருவாகியுள்ளது.

மேலும் அம்பத்தூர் ஏரியில் இருந்து பட்டரவாக்கம் வழியாக கொரட்டூர் செல்லும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் செல்வதற்கு முடியால் அம்பத்தூர், கருக்கு மேனாம்பேடு, ஞானமூர்த்தி நகர், டிடிபி காலனி மற்றும் டி.என்.இ.பி. காலனி பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்தது. இதனால் வீடுகளில் இருந்த நாற்காலி, தொலைக்காட்சி, பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட்கள் தண்ணீரில் மிதக்கின்றன.

இது பற்றி பாதிக்கப்பட்ட மக்கள் கூறும்போது, ஒவ்வொரு முறையும் பெய்யும் மழைக்கு இதே போன்றுதான் தண்ணீர் வருகிறது. இதற்கு பல முறை மாநகராட்சியில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அதிகாரிகள் மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News