குழந்தை விற்பனையில் ஈடுபட்ட மத போதகர் - பின்னந்தலையில் தட்டி உள்ளே வைத்த போலீசார்!

குழந்தை விற்பனைக்கு ஈடுபட்ட மத போதகர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

Update: 2022-11-29 02:54 GMT

குழந்தை விற்பனை வழக்கில் மத போதகர் உட்பட இரண்டு நபர்கள் தற்பொழுது கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் தான் சந்திரசேகர் என்பவர். இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 25 வயது பெண்ணை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இவர் கடந்த 2020இல் சென்னையில் வந்து தீ-நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, திருமணம் செய்து கொள்ளாமல் இரண்டு பேரும் ஒன்றாக வீட்டில் வசித்து வருகிறார்கள்.


திருமணம் செய்து கொள்ளாமல் பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறார். இதன் காரணமாக அவர் கர்ப்பமானார். கடந்த பிப்ரவரியில் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையை வளர்க்க முடியாததால் அதை விற்க முடிவு செய்து இருக்கிறார். அப்பொழுது திருநெல்வேலி சேர்ந்து கிறிஸ்துவ மத போதகரான பிரான்சிஸ் மற்றும் ஈரோட்டை சேர்ந்த தேன்மொழி ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் வாயிலாக ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தம்பதி இடம் இரண்டு லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விட்டு இருக்கிறார்.


இந்நிலையில் குழந்தை குறித்து தகவல்களை கேட்ட காதலி தொந்தரவு செய்து இருக்கிறார். ஆத்திரமடைந்த அவர் அந்த பெண்ணை விட்டுவிட்டு வேறு பெண்ணிடம் சென்றதாகவும் கூறப்படுகிறது. தன்னுடைய குழந்தையை விற்றதன் காரணமாக சந்திரசேகர் மீது காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்து இருக்கிறார் அந்த பெண். இதன் காரணமாக மகளிர் காவல் நிலையம் கடந்த பத்தாம் தேதி புகாரை எடுத்து விசாரித்தது. இதனால் சந்திரசேகர் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும் குழந்தை விற்பனைக்கு உடந்தையாக இருந்த மத போதகர் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News