திருச்சபை ஆக்கிரமிப்பில் உள்ள நிலம்: எந்த நடவடிக்கையும் எடுக்காத தாசில்தார்!

ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்க வேண்டும் என்று கோரிக்கை மனு.

Update: 2022-12-07 09:15 GMT

ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த மனுவின் விசாரணை அடிப்படையில் தாசில்தான் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றசாட்டு எழப்பட்டு இருக்கிறது. தாராபுரம் அரிமா நகரச் சேர்ந்தவர் சுந்தர சுவாமி என்பவர் இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட்டன் மனு தாக்கல் செய்து இருக்கிறார். அதில் சித்திர சித்திராவுத்தன் பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட 3.13 ஏக்கர் நிலம் 1912 ஆம் ஆண்டு வருவாய் துறை ஆவணத்தின்படி குட்டை நிலம் என உள்ளது.


ஆனால் பல ஆண்டுகளாக தென்னிந்திய திருச்சபை நிர்வாக ஆக்கிரமிப்பில் உள்ளதாக குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் நடத்தை மீட்டு அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார். இதனை விசாரித்த நீதிபதிகள் ராஜா மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் இது தொடர்பாக 6 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வருவாய் துறை தலைமைச் செயலாளர் திருப்பூர் கலெக்டர் தாராபுரம் டி ஆர்.டி.ஓ ஆகியோருக்கு அக்டோபர் இருவதில் உத்தரவிட்டு இருக்கிறார்கள்.


தாராபுரம் தாசில்தாருக்கு ஆர்.டி.ஓ குமரேசன் நவம்பர் எட்டாம் தேதி பரிந்துரை செய்தார். ஆனால் காலத் தாமதம் முடிந்தும் தாசில்தார் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு இருக்கிறார். தாராபுரம், டிச. 2-ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தை மீட்பதில், ஐகோர்ட் உத்தரவிட்டும், தாசில்தார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Input & Image courtesy: Dinamalar News

Tags:    

Similar News