மதுரை விமானநிலையத்தில் வரவேற்க கூட்டம் இல்லாததால் கடுப்பான தி.மு.க தலைவர் ஸ்டாலின்.!

மதுரை விமானநிலையத்தில் வரவேற்க கூட்டம் இல்லாததால் கடுப்பான தி.மு.க தலைவர் ஸ்டாலின்.!

Update: 2020-11-04 09:08 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் பங்கேற்க சென்ற ஸ்டாலின் அ.தி.மு.க'வினரின் அதிரடி விளம்பர நடவடிக்கைகளால் கோபப்பட்டு மதுரை விமான நிலையத்தில் இருந்து வேகமாக சென்ற சம்பவம் நடந்தேறியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஆகிய இருவரும் ஒரே விமானத்தில் இடது வலது புறமாக அமர்ந்து மதுரை சென்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அ.தி.மு.க அமைச்சர்கள் முதல் நிர்வாகிகள் வரை தடபுடல் ஏற்பாடுகளை செய்திருந்தனர். வழிநெடுகிலும் கட்சி தொண்டர்களை பேனர்களோட நிறுத்தி வைத்திருந்தார்கள்.

ஆனால், தி.மு.க தலைவர் ஸ்டாலினை வரவேற்க தி.மு.க நிர்வாகிகள் மட்டுமே வந்திருந்தனர். தொண்டர்கள் கூட்டத்தை காணவில்லை. நிர்வாகிகளும் ஸ்டாலினை வரவேற்க முண்டியடித்ததால் முன்னாள் எம்.எல்.ஏ கம்பம் ராம கிருஷ்ணனுக்கு காயம் பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால், முதலில் ஸ்டாலினை பாதுகாப்பு போலீசார் வெளியில் அனுப்பி விட்டார்கள். வெளியே வந்த ஸ்டாலின் கண்ணில் அ.தி.மு.க கொடிகளாகவே தென்பட கடும் அப்செட்டாகி விருட்டென காரில் ஏறி விடுதிக்கு சென்றுவிட்டார். பின்னர் அங்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Similar News