சென்னை விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ரவியை வரவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் !

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆர்.என்.ரவி நேற்று இரவு சென்னைக்கு விமானம் மூலம் வந்தடைந்தார். அவரை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்றார்.

Update: 2021-09-17 02:04 GMT

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆர்.என்.ரவி நேற்று இரவு சென்னைக்கு விமானம் மூலம் வந்தடைந்தார். அவரை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்றார்.

தமிழக ஆளுநராக கடந்த 4 ஆண்டுகளாக பதவி வகித்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் கடந்த 14ம் தேதி தமிழகத்தில் இருந்து விடைபெற்று பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றார்.

இந்நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட நாகலாந்து மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி, டெல்லியில் இருந்து பயணிகள் விமானம் மூலம் சென்னைக்கு நேற்று இரவு சுமார் 8:18 மணியளவில் வந்தடைந்தார்.

அவரை வரவேற்க விமான நிலையத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, நேரு, மற்றும் தலைமைச் செயலர் இறையன்பு மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் வரவேற்றனர். முறைப்படி நாளை தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றுக்கொள்கிறார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமானம் செய்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Dinamalar


Tags:    

Similar News