கோவை அருகே ரயிலில் அடிப்பட்ட யானைக்கு 2வது நாளாக சிகிச்சை.!

கோவை மாவட்டம், மதுக்கரை அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானையின் மீது ரயில் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த யானை உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது.

Update: 2021-03-16 07:12 GMT

கோவை மாவட்டம், மதுக்கரை அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானையின் மீது ரயில் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த யானை உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது.

கோவை, நவக்கரை அருகே அடிப்பட்ட யானைக்கு சாடிவயல் யானை முகாமில் வைத்து இரண்டாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யானையின் பின் பகுதியில் எழும்புகள் உடைந்துள்ளதால் அதனால் எழுந்து நிற்க முடியாமல் அவதிப்பெற்று வருகிறது என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


 



மேலும், யானைக்கு உணவாக தண்ணீர், தர்பூசணி, வெல்லம் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது. ஊசி மூலம் மருந்தும் செலுத்தப்படுகிறது.

யானையின் உடல்நலத்தை கால்நடை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கோவை பகுதியில் தொடர்ந்து யானைகள் உயிரிழந்து வருவது வனஆர்வலர்களை சோகமடைய செய்துள்ளது.

Similar News