கோவையில் அதிர்ச்சி: யூ.பி.எஸ்., பேட்டரி வெடித்து தாய், 2 மகள்கள் வளர்ப்பு நாய் உயிரிழப்பு!

Update: 2022-03-15 13:55 GMT

கோவையில் யூபிஎஸ் பேட்டரி வெடித்ததில் தாய் மற்றும் 2 மகள்கள் ஒரு வளர்ப்பு நாய் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவருக்கு அர்ச்சனா மற்றும் அஞ்சலி என்ற இரண்டு மகள்கள் உண்டு. இவர்கள் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று (மார்ச் 15) காலை 7 மணியளவில் வீட்டில் திடீரென்று புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் உள்ளே பார்க்கும்போது வீட்டில் தாய் மற்றும் இரண்டு மகள்கள், ஒரு வளர்ப்பு நாய் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

இது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், யுபிஎஸ் பேட்டரியில் தீ விபத்து ஏற்பட்டு புகை வந்துள்ளது. இதனை அஞ்சலி மற்றும் விஜயலட்சுமி அணைக்க முயற்சி செய்தபோது அவர்கள் புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். அதே போன்று படுக்கையில் இறந்த மற்றொரு பெண் அர்ச்சனாவும் மூச்சு திணறலால் உயிரிழந்துள்ளனர். அவர்கள் வீட்டில் இருந்த வளர்ப்பு நாயும் உயிரிழந்தது என்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source, Image Courtesy: Daily Thanthi

Tags:    

Similar News