சிசிடிவி கேமரா பொருத்தாத கடைகளின் உரிமம் ரத்து: கோவை போலீஸ்!

Update: 2022-01-17 13:22 GMT

கோவை நகரத்தில் சிசிடிவி கேமரா பொருத்தாத கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய மாநகராட்சிக்கு பரிந்துரைக்கப்படும் என்று போலீசார் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் கடை மற்றும் அலுவலகங்கள், வணிக வளாகங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடை, அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாமல் உள்ளது. இதனிடையே இன்று கோவை மாநகர காவல்துறையினர் சிசிடிவி பொருத்தாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். மேலும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தாக கடைகளின் உரிமம் ரத்து செய்ய மாநகராட்சிக்கு பரிந்துரை செய்யப்படும் எனவும் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: Twiter

Tags:    

Similar News