அரசு பேருந்தில் பள்ளி படிக்கட்டில் பயணம் செய்து மாணவர்: கீழே விழுந்து பலி!

அரசு பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர் கீழே விழுந்து பலியானார்.

Update: 2022-11-15 11:23 GMT

அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் நோக்கி இன்று காலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தத. அந்த பஸ்ஸில் பயணம் செய்து கல்லூரி மாணவர் தான் தற்போது உயிரிழந்து இருக்கிறார். அதிகமான கூட்ட நெரிசல் காரணமாக படிக்கட்டில் பயணம் செய்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். ஏற்கனவே அரசு பேருந்துகளில் மாணவர்கள் பயணம் செய்யும்போது படிக்கட்டில் தொங்கிக்கொண்டே பயணம் செய்திருக்கிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இருந்தது.


காவல்துறையும் மற்றும் அந்த பள்ளியின் ஆசிரியரும் தங்களுடைய மாணவர்களை படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்க வேண்டும் என்று ஏற்கனவே போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கூட்டம் அதிகமாக இருந்தால், படிக்கட்டில் தொங்கி பயணம் செய்த கல்லூரி மாணவர் தற்போது உயிரிழந்து இருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


வெள்ளையா புரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மாதேஷ் என்பவர் கல்லூரி செல்வதற்காக பேருந்தில் பயணம் செய்தார். குறிப்பாக அவர் பஸ்ஸில் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார் கீழே விழுந்ததன் காரணமாக அவர் பலத்த காயும் அடைந்து சம்பவம் இடத்திலேயே உயிரிழந்து இருக்கிறார்.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News