அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டத்திலேயே இப்படியா? புழுக்கள் நெளியுது... பார்க்கவே அருவருப்பு!

Concerns over claims of rotten eggs served in Karur government school after video goes viral

Update: 2021-12-26 00:45 GMT

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த புழுக்கள் தாக்கிய அழுகிய முட்டைகள் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் நாகனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தின் கீழ் 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டைகளின் தரம் குறித்து பல புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை மதியம் கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று மதிய உணவு இடைவேளையின் போது வழங்கப்படும் உணவை ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த வளாகத்தில் புழுக்களுடன் அழுகிய முட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டெடுத்ததாக கூறப்படுகிறது. ஆசிரியர்களும், சமையற்காரரும் அதற்கு திருப்திகரமான பதிலை அளிக்காததால், கூட்டத்தினர் சேமித்து வைக்கப்பட்டிருந்த முட்டைகளை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பரப்பி, அதிகாரப்பூர்வ நடவடிக்கையை கோரினர்.

தோகமலை பிடிஓவிடம் விசாரித்தபோது, ​​"இவை அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள். ஆசிரியர்களுடனான பகை காரணமாக, வெள்ளிக்கிழமை பள்ளிக்கு வந்த PTA (பெற்றோர் ஆசிரியர் சங்கம்) நிர்வாகி ஒருவர் வீடியோ பதிவு செய்து தவறான தகவல்களைப் பரப்பத் தொடங்கினார். மாணவர்களுக்கு தினமும் தரமான முட்டை வழங்குவதுடன், தலைமையாசிரியர் தரத்தை கண்காணித்து வருகிறார். பெற்றோர்கள் தவறான பிரச்சாரத்தில் விழ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

தற்போதைய தகவலின் படி, இது தொடர்பாக அந்தப் பள்ளியில் உள்ள மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளி தலைமையாசிரியர், சத்துணவு அமைப்பாளர், சமையலர் ஆகியோரை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.



Tags:    

Similar News