கோவையில் 3 அரசு பள்ளி மாணவர்களுக்கு கொரோனா ! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை அரசு பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-09-06 09:04 GMT

கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை அரசு பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசோதனை செய்ததில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சுல்தான்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு இன்று ஒருநாள் விடுமுறை விடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பள்ளியின் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தஞ்சாவூரில் பள்ளி மற்றும் கல்லூரியை சேர்ந்த 3 மாணவ, மாணவிகளுக்கு தொற்று உறுதியான நிலையில் தற்போது கோவையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Source: Daily Thanthi

Image Courtesy: The economics Times

https://www.dailythanthi.com/News/TopNews/2021/09/06102252/Corona-confirmed-for-3-students-in-Coimbatore.vpf

Tags:    

Similar News