கொரோனா நிவாரண நிதி.. ரூ.2,000 வழங்கும் திட்டம் இன்று தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்.!

தமிழகத்தில் கொரோனா நிவாரணத் தொகை வழங்கும் முதல் தவணையாக ரூ.2,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைக்கிறார்.

Update: 2021-05-10 04:14 GMT

தமிழகத்தில் கொரோனா நிவாரணத் தொகை வழங்கும் முதல் தவணையாக ரூ.2,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைக்கிறார்.




 


நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ள நிலையில், அதன் பாதிப்புகள் தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. இதனிடையே திமுக ஆட்சிக்கு வந்தால் 4 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அதன் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

அதன்படி தற்போது திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் டோக்கன் முறையில் அனைத்து வீடுகளுக்கும் விநியோகம் செய்யப்படும் என அரசு கூறியுள்ளது.

Similar News