மதுரை மத்திய சிறை கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி.. சிறைத்துறை கண்காணிப்பாளர் தகவல்.!
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி அனைத்து குடிமக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று உறுதிஅளித்துள்ளார்.
மதுரை மத்திய சிறை வளாகத்தில் உள்ள கைதிகள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சிறைத்துறை கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி அனைத்து குடிமக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று உறுதிஅளித்துள்ளார்.
இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண் கைதிகள் என்று மொத்தம் 1,513 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.