சென்னைக்கு கொண்டுவரப்பட்ட 3 லட்சத்து 60 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்.!
மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் இருந்து விமானம் மூலம் 3 லட்சத்து 60 ஆயிரம் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் இருந்து விமானம் மூலம் 3 லட்சத்து 60 ஆயிரம் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிகப்பெரிய பேரிழப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், அதனை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என்பதால், மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில், புனேவில் இருந்து விமானம் மூலம் 3 லட்சத்து 60 ஆயிரம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்துள்ளது. இதனை தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்ட, சென்னையில் உள்ள தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.