ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு மீண்டும் அனுமதி - திருதிருவென விழிக்கும் இடதுசாரிகள்

பேரணியை நடத்திக்கொள்ள RSS அமைப்பிற்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-09-30 12:59 GMT

காந்தி ஜெயந்தி அன்று அக்டோபர் இரண்டாம் தேதி தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடக்க நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து. அனுமதி அளித்திருந்தது இந்நிலையில் தான் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் நீதிமன்றத்தை RSS அமைப்பு தற்போது நாடி இருக்கிறது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.


அக்டோபர் இரண்டாம் தேதி பல்வேறு கட்சியினரும் பேரணியும் நடக்க முடிவு செய்த இருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும். இந்த விசாரணை முடிவு அக்டோபர் இரண்டாம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெறக்கூடாது என்பதற்காக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மேல்முறையீடு செய்தது. அப்பொழுது அக்டோபர் இரண்டாம் தேதிக்கு பதிலாக நவம்பர் ஆறாம் தேதி பேரவையே நடத்திக் கொள்ளலாம்.


அதற்கான அனுமதியை தமிழக காவல்துறையின் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை அக்டோபர் 31ம் தேதி தள்ளி வைத்தார். அக்டோபர் 31ஆம் தேதிக்குள் காவல்துறை அனுமதி வழங்காவிட்டால் அடுத்த நாளில் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான நடவடிக்கை தொடரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். எனவே அக்டோபர் இரண்டாம் தேதி நடக்க இருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணி தற்போது நவம்பர் ஆறாம் தேதி நடத்திக் கொள்ளலாம் என்று நீதிமன்ற உத்தரவு வழங்கியுள்ளது.

Input & Image courtesy: Nakkheeran News

Tags:    

Similar News