டெல்லி தமிழ் சங்க குழு தலைவர் நியமனம்: தமிழர்கள் நலனுக்காக உழைக்க அண்ணாமலை வேண்டுகோள்!

டெல்லியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டெல்லி தமிழ் சங்க குழு தலைவருக்கு அண்ணாமலையின் வாழ்த்துக்கள்.

Update: 2022-12-02 02:26 GMT

டெல்லி தமிழ் சங்கம் என்பது தமிழக மக்களின் நலனுக்காக குறிப்பாக டெல்லியில் வாழும் தமிழர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட சங்கம் தான் டெல்லி தமிழ் சங்கம். இந்த சமூகத்தின் மூலமாக தமிழ் மக்களுக்கும் உரிய பாதுகாப்பும் மற்றும் சமூக சேவைகளை செய்யும் சங்கமாக உருவாகியது தான் டெல்லி தமிழ் சங்கம். இந்த டெல்லி தமிழ் சங்கத்தின் தற்போதைய தலைவராக பெருமாள் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.


டெல்லியில் நடைபெறும் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நடைபெறுகிறது. டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு சவால் அளிக்கும் வகையில் உள்ளது. இந்த நிலையில் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இங்கு தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கினார்.



அப்பொழுது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி தமிழ் சங்க குழுவை சந்தித்தார். இது பற்றி அவர் ட்விட்டர் பதிவில் பதிவிடுகையில், "புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டெல்லி தமிழ்ச் சங்கத்தின் குழுவினரை புதுடெல்லியில் சந்தித்ததில் மகிழ்ச்சி. புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள திரு.பெருமாள் அவர்கள் தலைமையிலான இந்த குழு, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தமிழர்களின் நலனுக்காக சேவை செய்திட வாழ்த்துகிறேன்" என்று கூறி இருக்கிறார்.

Input & Image courtesy: Twitter

Tags:    

Similar News