தருமபுரி: அரசு மருத்துவமனையில் மலை போல் குவிந்த மருத்துவ கழிவுகள்.!

தருமபுரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மலை போன்று கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-06-08 07:16 GMT

தருமபுரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மலை போன்று கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணாம அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை குவிந்து வருகிறது. இதனிடையே மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளித்த பின்னர் மருத்துவ கழிவுகள் டன் கணக்கில் சேர்கிறது. இதனை முறையாக அகற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் பல மாவட்டங்களில் எழுந்துள்ளது.




 


இந்நிலையில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் உள் நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் என்று தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்கள் வந்து செல்கின்றனர். இதனிடையே கொரோனா தொற்று காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்ட மருந்து பாட்டில்கள் மற்றும் மருத்துவ கழிவுகள், வளாகத்தில் மலை போன்று கொட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவ கழிவுகளால் பல நோய் தொற்றுகள் உண்டாகும் என பொதுமக்கள் மட்டுமின்றி நோயாளிகளும் மிகுந்த அச்சத்தில் தள்ளப்பட்டுள்ளனர். எனவே நகராட்சி அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக குப்பைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News