கதிரவன் வாசலை மிதிக்க துணிந்து விட்டாரா கருப்பு எம்ஜிஆர்? ச்சுட.. ச்சுட சூடான தகவல்கள்.!
கதிரவன் வாசலை மிதிக்க துணிந்து விட்டாரா கருப்பு எம்ஜிஆர்? ச்சுட.. ச்சுட சூடான தகவல்கள்.!
உலக மகளிர் தினத்தையொட்டி திருச்சியில் கடந்த 2008 ஆம் ஆண்டு தேமுதிக தொடங்கப்பட்ட மூன்றாம் ஆண்டில், அக்கட்சி நடத்திய மகளிர் அணி பொதுக் கூட்டம் ஒரு மாநாடாகவே காட்சி அளித்தது.
தமிழ்நாட்டில் இது வரையில் எந்த அரசியல் கட்சியும் மகளிரை மட்டும் வைத்து இவ்வளவு சிறப்பாக மாநாடு போன்று நடத்திய வரலாறு கிடையாது. பெண்கள் தங்களுடைய வீட்டு வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, எவ்வளவோ சிரமங்களுக்கிடையில் என்னுடைய அழைப்பை ஏற்று மாநாட்டில் பல லட்சக்கணக்கில் கலந்து கொண்டது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சி என்றார் அன்று விஜயகாந்த்.
அப்போது திமுக ஆட்சியில் இருந்தது. ஏராளமான விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் திமுக மீது வைக்கப்பட்ட காலம். அக் குற்றச்சாட்டுகளை ஒரு பக்கம் அதிமுக தலைவர் ஜெயலலிதாவும், இன்னொரு பக்கம் விஜயகாந்தும் சிறப்பான முறையில் மக்களிடையே கொண்டு சென்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நேரம்.
ஒரு பக்கம் திமுக, அதிமுக மீது பதிலுக்கு ஊழல் சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருந்த போது, மாசற்ற தலைவராக தமிழக அரசியலில் விஜயகாந்த் உலா வந்த நேரம். தமிழகத்தின் மூலை முடுக்குகளிலும், ஆதிவாசிகள் வாழும் சின்னஞ்சிறிய கிராமங்களில் கூட தேதிமுக கொடி பட்டொளி வீசி பறந்து கொண்டிருந்த காலம் அது. விஜயகாந்த் மீது ஏராளமான எதிர்பார்ப்புகளை தமிழக புதிய தலைமுறையினர் வைத்திருந்த நேரம் அது. அதிமுக, திமுக இரண்டுக்கும் சரியான மாற்றுக் கட்சியாக தேதிமுக தன்னை பறை சாற்றிக் கொண்ட காலம்.
இந்நிலையில் துக்ளக் சோ போன்ற மத்தியஸ்தர்களின் தலையீட்டால் 2011 சட்ட சபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக - தேதிமுக கட்சிகள் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. 203 இடங்களை அக்கூட்டணி வென்று பிரம்மாண்ட சாதனை படைத்தது.
2006 ஆம் ஆண்டு பாமக கோட்டையான விருத்தாச்சலத்தில் வென்றது மிகப்பெரிதாக பார்க்கப்பட்டது. அதற்கு முன்பு 2011 – ல் ரிஷிவந்தியம் சட்டசபைத் தொகுதியில் வேட்பாளராக நின்று தமிழகத்தில் அதிக வித்தியாசத்தில் அவர் பெற்ற வெற்றி, அவரைப் பார்த்து மலைக்க வைத்தது.