'யார்ட்ட கடனை திருப்பி கேட்குற நான் தி.மு.கடா' - கடனை திருப்பி கெட்டவரை அரிவாளோடு விரட்டிய தி.மு.க கவுன்சிலர் கணவர்!

கொடுத்த கடனை திருப்பி கேட்டேன் அவள் அருவாளுடன் விரட்டி சென்ற தி.மு.க கவுன்சிலர் கணவரின் வீடியோ.

Update: 2022-08-11 10:00 GMT

தி.மு.க கவுன்சிலர் நித்தியா என்பவரின் கணவர் தான் கடனை திருப்பி கேட்டவரை அருவாளுடன் நடுரோட்டில் விரட்டி சென்ற சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தி.மு.க கவுன்சிலரின் கணவர் டாஸ்மார்க் வைத்து இருப்பதாக தெரியவருகிறது. மேலும் இந்த டாஸ்மாக் தொடர்பாக இரு தரப்பினரிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக கடன் வாங்கிய தி.மு.க கவுன்சிலரின் கணவர் வாங்கிய கடனை திருப்பி தராத காரணத்துக்காக அவரிடம் கடன் கொடுத்தவர் கேட்டு வந்துள்ளார்.


அவரை ஆட்கொண்டு மிரட்டியுள்ளார் தி.மு.க கவுன்சிலரின் கணவர். தமிழகத்திற்கு விடியல் கொண்டு தருகிறேன் என்று வாக்குறுதி அளித்த பிறகுதான் ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளார். ஆனால் அவர் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு தி.மு.க நிர்வாகிகள் இந்த மாதிரியான செயல்கள் அடிக்கடி ஈடுபட்டு வந்துள்ளார்கள். அந்த வகையில் தற்போது தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விடியல் அரசு மீது பல்வேறு ஊழல் புகார்களை தெரிவித்து வருகிறார். 


இதனை மெய்ப்பிக்கும் விதமாக தி.மு.க கவுன்சிலர் இந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடன் கேட்டு வருபவர்கள் தான் இன்றைய காலகட்டங்களில் மிகவும் தைரியமாக இருக்கிறார்கள். கடன் கொடுத்தவர்கள் அவர்களிடம் ஏதோ ஒன்றை கொடுத்து விட்டு பரிதாபகரமான நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் கடன் செலுத்த வேண்டியதற்காக ஒரு நபரை அதுவும் பட்டப்பகலில் அருவாள் கொண்டு ஓட ஓட விரட்டி இருக்கும் தி.மு.க கவுன்சிலர் இந்த செயல் தற்போது அந்த பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Input & Image courtesy: BBC News

Tags:    

Similar News