தமிழ்நாட்டில் தீவிரவாத தடுப்புப்படை தேவை இல்லை என கூறிய தி.மு.க அரசு - ஏன் தெரியுமா?
தமிழகத்தில் தீவிரவாத தடுப்பு படையை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தீவிரவாத தடுப்பு படையை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்க காவல் துறையில் ஏற்கனவே மூன்று பிரிவுகள் உள்ளதால் தமிழகத்தில் தீவிரவாத தடுப்பு படை உருவாக்க அவசியமில்லை என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்துள்ளது.
தமிழகத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவை உருவாக்க அரசுக்கு உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது, இந்த விசாரணையில் இலங்கையை தேவாலய குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் கைதானத்தை சுட்டிக்காட்டி நீதிபதிகள் மனுவுக்கு நாலு வாரத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் உத்தரவிட்டனர்.